ட்விட்டர் நிறுவனம், தனது பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டோரி அப்டேட்ஐ தற்பொழுது வெளியிட்டது. மேலும் அதற்க்கு “பிளீட்” (Fleet) என பெயரிட்டனர்.
தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும், அந்த நிறுவனங்கள் தங்களின் பயனாளர்களுக்கு பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வருகின்றனர்.
இதேபோலவே, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனமும் “ஸ்டோரி” அப்டேட்டை வழங்கியுள்ளது. அதற்க்கு “பிளீட்” (Fleet) என பெயரிடத்து. ட்விட்டர் பயனாளர்கள் பலரின் நீண்ட நாள் கோரிக்கையான இதை ட்விட்டர் நிறுவனம் ஏற்று, இந்த அப்டேட்டை வழங்கியுள்ளது. ட்விட்டர் ஃப்ளீட் மூலம் போட்டோக்கள், செய்திகள், GIF படங்கள், உள்ளிட்டவைகளை பகிர முடியும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிளீட், 24 மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும் எனவும், இதனை லைக்கோ, ரீட்வீட்டோ செய்ய முடியாது என்றும், தனிப்பட்ட முறையில் கமெண்ட் மட்டும்தான் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், நீங்கள் பதிவிட்ட பிளீட்டை யாரெல்லாம் பார்த்தார் என்பதையும் நீங்கள் பார்க்கலாம். இந்த அப்டேட், ட்விட்டர் செயலி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. இணையதளங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களால் இந்த வசதியை பயன்படுத்த முடியாது என ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த அப்டேட் தற்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…