சிம்பு அடுத்ததாக மாநாடு உட்பட 4 படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஊரடங்கு காரணமாக சிம்பு பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் திரிஷாவுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதனையடுத்து கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு நடிப்பில் ‘மப்டி’ என்னும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஊரடங்கு முடிவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் சிம்புவின் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க போவதாகவும், அந்த படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வைகை புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தது. அது மட்டுமின்றி சிம்புவின் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் என்பவர் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…