ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் விரைவில் கொரோனாவை வென்று விடுவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வரும் 14 ஆம் தேதி, இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று, புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியர்கள் இருக்கும் பல நாடுகளில் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில், பிரிட்டன் நாட்டில் இந்தியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் அங்கு தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும். இந்தியாவை போலவே அவர்கள் உற்சாகத்துடன், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கியும் தீபாவளியை கொண்டாடுவார்கள். இதன்காரணமாக அங்கு “உலக தீபாவளி தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தற்பொழுது பிரிட்டனில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் காணொளி காட்சி வாயிலாக தீபாவளி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்நன்னாளில் இருள் மீது ஒளி வெற்றி பெறுகிறது, தீமை அழிகிறது, அறியாமை அகலுகிறது என்பதை தீபாவளி நமக்கு கற்றுக்கொடுத்ததை போல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை வெல்வோம் என கூறியுள்ளார்.
மேலும், இந்த தீபாவளி தினத்தன்று ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் விரைவில் கொரோனாவை வென்று விடுவோம் என கூறிய அவர், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நமது தியாகங்களும், சரியானதை செய்வதற்கான உங்கள் உறுதியும் உண்மையில் உயிர்களை காப்பாற்ற உதவுகின்றன என்பதை அறிந்து கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…