ஆண்கள் பெண்கள் இருவருமே முகம் பொலிவாக வெள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதிலும், முகத்தில் எண்ணெய் பசை இன்றி முகம் பொலிவுடன் இருப்பதற்கான சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவர முகத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி பளபளப்பாக இருக்கும்.
அதுபோல தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகுடன் தோற்றமளிக்கும். தினமும் மூன்று அல்லது நான்கு முறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வருவதாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி சருமம் புத்துயிர் பெற்று பொலிவுடன் காணப்படும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…