முகத்திலுள்ள எண்ணெய் பசையை போக்கும் சில வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்!

Default Image

ஆண்கள் பெண்கள் இருவருமே முகம் பொலிவாக வெள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதிலும், முகத்தில் எண்ணெய் பசை இன்றி முகம் பொலிவுடன் இருப்பதற்கான சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவர முகத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி பளபளப்பாக இருக்கும்.

அதுபோல தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகுடன் தோற்றமளிக்கும். தினமும் மூன்று அல்லது நான்கு முறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வருவதாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி சருமம் புத்துயிர் பெற்று பொலிவுடன் காணப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்