முகப்பருக்களை நீக்க முக்கியமான சில இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்…!

Published by
Rebekal

சில சமயங்களில் நமது முகத்தில் வரக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறது. இதனை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பது நிவாரணம் கொடுத்தாலும், அது நமது சருமத்தை சேதப்படுத்தும். எனவே சருமத்திற்கு எவ்வித சேதமுமின்றி விரைவில் முகப்பரு குணமாக இயற்கை வழிமுறைகள் சிலவற்றை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

கற்றாழை ஜெல்

Aloe Vera Gel

நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் உள்ள குளிர்ச்சி தன்மை காரணமாக சருமத்தில் வறட்சி நீங்கி சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அதனுடன் வைட்டமின் ஈ மாத்திரை கலந்து முகத்தில் தடவி விட்டு தூங்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

நன்மைகள் : தேங்காய் எண்ணெய் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்களை நீக்க உதவுகிறது. முகத்திற்கு பளபளப்பை கொடுக்கவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : தேங்காய் எண்ணெயில் இரண்டு முதல் மூன்று சொட்டு எடுத்துக் கொண்டு இதனை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

ஐஸ்

நன்மைகள் : பருக்களின் வீக்கம் மற்றும் எரிச்சலை குறைப்பதற்கு இந்த ஐஸ் மிகவும் உதவுகிறது. மேலும் இது நமது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முகப்பருக்கள் நீங்க உதவி செய்கிறது.

உபயோகிக்கும் முறை : இரவு தூங்குவதற்கு முன்பும் காலையில் எழுந்து சிறிது நேரம் கழித்த பின்னரும் முகத்தில் ஒரு துணியில் ஐஸை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நமது முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து பருக்கள் நீங்க உதவுகிறது.

க்ரீன் டீ

நன்மைகள் : இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இது முகப்பரு, முக வீக்கம் ஆகியவற்றை நீக்குவதற்கு உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : க்ரீன் டீயை குளிர்சாதன பெட்டியில் வைத்து நன்றாக குளிர வைத்துவிட்டு, இதனை முகத்தில் பரு உள்ள இடங்களில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

தேன்

 

நன்மைகள் : முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குவதற்கு தேன் பெரிதும் உதவுகிறது. அதில் அதிகளவு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை : இரவு தூங்குவதற்கு முன்பாக தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் கிரீம் போல பூசி விட்டு தூங்க வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை சுத்தம் செய்துவிட வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

நன்மைகள் : நமது முகத்தில் காணப்படக்கூடிய முகப்பருவை உருவாக்குவதற்கான பாக்டீரியாவை அழித்து நமது சருமத்தின் நிறத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : இந்த ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை கழுவி விட வேண்டும்.

பூண்டு

 

நன்மைகள்: பூண்டு பாக்டீரியா எதிர்ப்பு, அண்டிசெப்டிக் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இது முகப்பருக்களை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : பூண்டை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். அதன் பின்பு 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

26 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

28 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

60 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago