கோடைகாலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான். கோடைகாலத்தில் மாம்பழம் அதிகளவில் கிடைக்கிறது. அட்டகாசமான இனிப்பு சுவை கொண்ட மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியமும் இதில் அதிக அளவில் தான் இருக்கிறது. இப்போது நாம் மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நமது தோல் பளபளப்புடன் மாறுவதுடன் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய் போன்றவையும் நீங்குகிறது. மேலும் தீராத தலைவலியை குணப்படுத்த கூடிய தன்மை இந்த மாம்பழத்திற்கு உண்டு. இதில் அதிக அளவு நார்ச் சத்து காணப்படுவதால் ஜீரண உறுப்புகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த மாம்பழத்தை சாப்பிடுவதால் பல் வலி மற்றும் பல் ஈறுகளில் காணப்படக் கூடிய இரத்தக் கசிவு ஆகிய பிரச்சினைகள் குணமாகும்.
மேலும் கண்களில் ஏற்படக்கூடிய கண் எரிச்சல், கண் அரிப்பு மற்றும் மாலைக்கண் நோயை குணப்படுத்த மாம்பழம் உதவுகிறது. மேலும் இந்த மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுவதால், நமது உடலில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் உருவாகக்கூடிய கற்களைப் போக்குவதிலும், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு இது உதவுகிறது.
மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் சத்து காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிச்சயம் மாம்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஹார்மோன்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் இது உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட மாம்பழத்தை மலிவாக கிடைக்கும் நேரங்களிலாவது அதிகளவில் வாங்கி உட்கொள்வோம், தேவையற்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…