தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சொத்தைப்பல். இந்த சொத்தைப்பல்லை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இருந்தால் பல் சொத்தை பாதிப்பு வேரையும் பாதிக்கும்.
இதனால் பின்னர் நாளடைவில் பல்லை அகற்றும் நிலை ஏற்படும் இதனை தவிர்க்க இயற்கையான முறையில் எப்படி சொத்தைப்பல்லை சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம்.
வழிமுறைகள்:
தினமும் காலையில் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வைத்து கொப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி , பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் சொத்தை பற்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் .
காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பல்துவக்குவதற்கு முன் ஒரு நிமிடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளை உணவு சாப்பிடும் முன் செய்து வந்தால் பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.
மஞ்சத்தூளை சொத்தை பற்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்தால் சொத்தைப் பற்கள் குறைந்து விடும்.
வேப்பிலையை சாரை சொத்தை பற்கள் மீது தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும் .அப்படியில்லையென்றால் தினமும் வேப்பங்குச்சியை கொண்டு பல்துலக்கினால் சொத்தை பல்களில் இருந்து ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…