‘நான் அவரது பெரிய ரசிகர்னு சொல்லிடுங்க’ நடு இரவில் எஸ்ஜே சூர்யாவிற்கு கால் செய்த தளபதி.!

Published by
Ragi

நடிகர் எஸ்ஜே சூர்யாவிற்கு விஜய் நடு இரவில் கால் செய்து பாராட்டிய நெகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார்.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவலை எஸ்ஜே சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

எஸ்ஜே சூர்யா கூறியதாவது ,நான் ஸ்பைடர் மேன் படப்பிடிப்பில் இருக்கும் போது இரவு 11 மணிக்கு விஜய் பேசுறேன் என்று கூறி ஒரு போன் கால் வந்தது.நான் யாரு என்று கேட்டேன் , ஏனெனில் ஏற்கனவே என்னிடம் விஜய் சார் நம்பர் இருந்தது .இது புது நம்பர் ஆனாதால நான் நம்பவில்லை என்றும் ,அடுத்து பேசுவதற்கு முன்பு மொபைல் ஆஃப் ஆயிடுச்சு.மீண்டும் கால் வந்து பேசிய போது அண்ணா நான் விஜய் என்று கூறி விட்டு இப்போது தான் நெஞ்சம் மறப்பதில்லை டிரெய்லர் பார்த்தேன் .ஒரு மனுஷன் எவ்வளவு தான் கஷ்டப்படுவான்னு நீங்க பேசுற வசனம் கேட்டுட்டு வீட்டில் விழுந்து விழுந்து சிரித்தேன் என்று கூறினார்.பின் நடிகர் எஸ்ஜே சூர்யாவிடம் விஜய் அவருக்கு பெரிய ரசிகர் என்று சொல்லுங்கள் என்றும் கூறினார் .அது எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது என்று எஸ்ஜே சூர்யா நடிகர் விஜய் பாராட்டிய நெகிழ்ச்சியான தருணம் குறித்து கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

11 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago