கொரோனா தடுப்பூசி சோதனையின் இந்தோனேசியாவை சேர்ந்த முன்னணி பெண் விஞ்ஞானி மரணம்…!

இந்தோனேசியாவை சேர்ந்த சினோவேக் தடுப்பூசி சோதனையின் முன்னணி பெண் விஞ்ஞானி நோவிலியா ஸ்ஜாஃப்ரி உயிரிழந்துள்ளார்.
அதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், கொரோனவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பல நாடுகளிலும் தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இந்தோனேசியாவிலும் சினோவோக் தடுப்பூசி மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை கண்டறிவதற்கான சோதனைகளில் முன்னணி விஞ்ஞானியாக விளங்கிய நோவிலியா ஸ்ஜாஃப்ரி எனும் பெண் விஞ்ஞானி தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், இவர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் போன்ற நெறிமுறைகளின்படி புதைக்கப்பட்டதால் இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசுக்கு சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம் பயோஃபர்மாவின் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், நோவிலியா ஸ்ஜாஃப்ரி எனும் பெண் விஞ்ஞானியின் மரணம் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு எனவும், தடுப்பூசியை கண்டறிவதில் மட்டுமல்லாமல், பல கண்டுபிடிப்புகளில் இவர் முன்னணித் தலைவராக இருந்ததாகவும் கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025