காற்று மாசுபாட்டால் கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

காற்று மாசுபாட்டால் கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 6.7 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் மக்கள் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதாலும் எரிபொருள் சாதனங்கள் பயன்படுத்த கூடிய நிறுவனங்கள் அதிகரித்துள்ளதலும், காற்று மாசுபாடு மிக அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளும் வருடம்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் எனும் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் காற்று மாசுபடுவதால் கருவிலேயே குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இதனால்தான் குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை குழந்தைகள் பிறப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தைகள் சிலர் பிறந்ததும் இறப்பதற்கும் இதுதான் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளதுடன், எரிபொருள் கரி, மரக்கட்டை விலங்குகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கூடிய எரிபொருட்கள் மூலம் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டால் 5 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் இது தான் காரணமாக கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் பெருமளவில் கருவில் உள்ள குழந்தைகள்தான் பாதிக்கப் படுகின்றனர் என்பதே இந்த அறிக்கையின் அதிர்ச்சித் தகவல். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 6.7 மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாகவும், அதே சமயம் இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

46 minutes ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

1 hour ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

2 hours ago

முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

3 hours ago

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…

3 hours ago

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

4 hours ago