நில மோசடி வழக்கு : நடிகர் சூரி கமிஷினர் அலுவலகத்தில் ஆஜர்!

Default Image

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அடையாறு காவல் நிலையத்தில் மோசடி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் 2.70 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரில் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா முன்பு விசாரணையில் இருந்து வரும் நிலையில், இந்த விசாரணை தொடர்பாக தற்பொழுது நடிகர் சூரி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் டிஜிபி ரமேஷ் மற்றும் அன்புவேல் ராஜனிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்