16 ஆண்டுகளுக்கு பிறகு ரீ – என்ட்ரி கொடுக்கும் லைலா.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் பிதாமகன், நந்தா, தீனா, போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை லைலா. இவர் கடந்த 2006-ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு திரையுலகினை விட்டு விலகினார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடைசியாக 2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில், லைலா 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தின் மூலம் ரீ -என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அதன்படி, இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ் மித்ரன் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து “சர்தார் “என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார்.

மேலும், இப்படத்தின் மூலம் 16 ஆண்டு இடைவேளைக்கு பிறகு நடிகை லைலா சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார். இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

56 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago