பெண்களே…! இந்த 8 பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்…!

Published by
லீனா

பொதுவாக நாம் அனைவரும் சந்தையிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் புதிதாக இருப்பதற்காக இப்படி செய்யலாம். பல நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது தான். ஆனால் சில சமயங்களில் குளிர் சாதன பெட்டியில் சில உணவுகள் மற்றும் பானங்களை வைத்திருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது.

தக்காளி

குளிர்சாதன பெட்டியில் அதிக அளவு தண்ணீர் இருக்கும் பகுதிகளில் தக்காளி அல்லது காய்கறிகளை வைத்திருக்க வேண்டாம். பெண்கள் தக்காளி அல்லது காய்கறியை இரண்டு, மூன்று நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து இருப்பதால் அவை அதிக தண்ணீரைஉறிஞ்சுவது மட்டுமல்லாமல், சில சமயங்களில் தக்காளியை பூச்சியும் அரிக்கின்றது. இதனால், காய்கறிகளில் இருந்து கெட்ட வாசனையையும் வரத் தொடங்குகிறது இந்த விஷயத்தில் அவை கெட்டுப் போவது மட்டுமல்லாமல் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மற்ற விஷயங்களையும் கெட்டுப் போக செய்கிறது.

சோயா சாஸ்

நீங்கள் சோயா சாஸை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சோயா சாஸ், தக்காளி கெட்ச்அப் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை.

தர்பூசணி

வெட்டுவதற்கு முன் நீங்கள் தர்பூசணி மற்றும் முலாம்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் வெட்டிய பின் அதைச் செய்யாதீர்கள். இந்த பழங்களில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை குளிர்சாதன பெட்டியில் வெட்டிய பின் வைக்கப்படும்போது கெட்டுவிடும்.

தேன்

தேனை குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், தேனின் சுவை மற்றும் மணம் கேட்டு போகிறது. எனவே , தேனை சாதாரண வெப்பநிலையில் நேரடி சூரிய ஒளியில் வைக்கலாம்.

ஜாம்

ஜாமை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். ஜாமை பயன்படுத்திய பின்னரும், வெளியில் வைத்தால் கெட்டு போகாது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். அவ்வாறு வைத்தால், அதன் சுவை கேட்டு குறைந்து போவதோடு, சில சமயங்களில் கேட்டு போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எண்ணெய்

சில பெண்கள் சமையலறையில் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அது கெட்டியாகி உறைகிறது. எனவே எண்ணெயை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக்கூடாது.

எலுமிச்சை

சிட்ரிக் அமிலமான எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

Published by
லீனா
Tags: #Fridgefoods

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

12 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

15 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

47 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago