கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடாத குவைத் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தாலும், அதே சமயம் மற்ற நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, மக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகிறது.
மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு சில சலுகைகளையும் உலக நாடுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்ட குடிமக்கள் மட்டுமே ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என குவைத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு தடை விதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பயண தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இதுவரை அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 21.95 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…