சூர்யாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்த குட்டி பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா .?

Default Image

சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீயா ஷர்மா வழக்கறிஞராக மாறியுள்ளார்

2005ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீயா ஷர்மா . அதனையடுத்து தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் 2006ல் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களது மகளாக நடித்தார். தனது குறும்பு பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதனையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் தமிழில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தில் நடித்திருந்தார் , ஹீரோயினாக 2014ல் வெளியான ‘கயாகுடு’ என்ற படத்தின் மூலம் களமிறங்கி பல பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வரவேற்பைப் பெற்றார். படிப்பையும், நடிப்பையும் சரியாக கொண்டு போயிருந்த இவர் தற்போது தனது படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞராக மாறியுள்ளார். இதனை பார்த்த பலர் சூர்யாவின் படத்தில் நடித்த அந்த குட்டி குழந்தையா என்ற ஷாக்கில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்