கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றம்ச்சாட்டி வந்த நிலையில் தற்போது குங் காய்ச்சல் (Kung flu ) என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
சீனாவில் உள்ள உகான் நகரில் தான் கொரோனா கண்டறியப்பட்டது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், சீனாதான் திட்டமிட்டு கொரோனவை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார்.குறிப்பாக கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றும் கூறி வந்தார்.மேலும் உகான் வைரஸ் என்றும் கூறி வந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது.நோய்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கொரோனா வைரஸிற்கு தான் அதிக பெயர்கள் உள்ளது.நானும் இதற்கு ஒரு பெயர் வைக்கிறேன்,குங் காய்ச்சல் (Kung flu ).குங் ஃபூ என்பது சீன தற்காப்புக் கலைகளைக் குறிக்கிறது. மக்கள் இந்த கலையில் சண்டையிட தங்கள் கைகளையும் கால்களையும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது மீண்டும் சர்ச்சையாக மாறியுள்ளது.
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…
லாஸ் ஏஞ்செல்ஸ் : ஆண்டுதோறும் சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆஸ்கர் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அமெரிக்கா…