குல்பூஷண் ஜாதவ் வழக்கு…இந்தியா கடும் கண்டனம்….!!

Default Image
  1. குல்பூஷண் ஜாதவ்_வுக்கு மரண தண்டனை 
  2. பாகிஸ்தான் தன்னிசையான முடிவு 
  3. இந்தியா சரமாரி குற்றச்சாட்டு 

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, தான் எடுத்துரைத்த வாதத்தில், குல்புஷண் ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று இந்தியா பல முறை முயற்சி செய்து வந்ததாகவும் ,  பாகிஸ்தான் நாடு ஒருமுறை கூட ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம் சுமத்தினர்.

மேலும் தெரிவிக்கையில் குல்பூஷண் தரப்பில் அவரின் விளக்கத்தை கேட்காமல் பாகிஸ்தான் நாடு தன்னிச்சையாக நடந்துகொள்வதாகவும் ,  சட்ட உதவிகள் கூட எதுவும் செய்யாமல் தூக்கு தண்டனை விதித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கூறுகையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளை கூட ஜாதவுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கவில்லை என்று பாகிஸ்தான் நாட்டின் மீது சால்வே சரமாரியான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன் வைத்தார். இந்த வழக்கு விசாரணை வருகின்ற 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்