பிக்பாஸூக்கு பிறகு… நிகழ்ச்சியில் நடுவராகும் கேபி..! என்ன நிகழ்ச்சி தெரியுமா..?

Default Image

பிக்பாஸிலிருந்து வெளியேறிய கேபிக்கு தற்போது முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக நியமனம் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடிய போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா . கடைசியாக தனது புத்திசாலித்தனத்தால் ரூ.5 லட்சம் பரிசு தொகையை எடுத்து கொண்டு வெளியே சென்றார் .இந்த நிலையில் தற்போது இவருக்கு விஜய் டிவியிலே வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது மாகாபா ஆனந்தால் தொகுத்து வழங்கப்படும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கேபி நடுவராக நியமனம் ஆகியுள்ளார் .இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் நடுவராக பிக்பாஸ் சீசன்-3 பிரபலங்களான யாஷிகா மற்றும் அபிராமி ஆகியோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்