ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கிடையேயான நிதி பரிவர்த்தனைகள் ஈடுபட்டதாக இரு இளவரசர்களை பதவி நீக்கம் செய்தற் மன்னர் சல்மான்.
இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாப்பாளரும், சவூதி அரேபியாவின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அசிஸ், இரண்டு அரச குடும்ப உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து, ஊழல் தொடர்பான விசாணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டார். இதன்படி, ஏமனில் நடைபெற்று வரும் போரில் சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியான இளவரசர் ஃபகத் பின் துர்கி, சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியமான அல் ஜீஃப் துணை ஆளுநராக இருந்த அப்துல்லா பின் ஃபகத் ஆகியோரை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கிடையேயான நிதி பரிவர்த்தனைகள் நடந்ததில் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, பட்டது இளவரசர் முகமது பின் சல்மானின் பரிந்துரைப்படி, அவர்கள் பதவி நீக்கம் செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, மார்ச் மாதத்தில் லஞ்சம் மற்றும் பொது அலுவலக பணத்தை எடுத்தது தொடர்பான குற்றச்சாட்டில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 300 அரசு அதிகாரிகளை மன்னரின் அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…