கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும், தெரிவித்து வந்தனர். மேலும், பொது இடங்களில் அவர் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் அதனை பொய் என நிருப்பித்து, அவர் ஒரு தொழிற்சாலையை திறக்கும் புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, அதுமட்டுமின்றி, அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அது பொய் என நிரூபிக்கும் விதமாக, வடகொரியாவில் கடந்த சில தினங்களுக்கு முன், மழை மற்றும் சூறாவளியின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதில் பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் பேசினார். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
வடகொரியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும், விவசாயிகளுடன் பேசும்போது மாஸ்க் அணியாமல் பேசினார். அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் கிம் ஜாங் சுறுசுறுப்பாக இருந்தார். இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் எனவும், அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…