பிரபாஸை அடுத்து மாஸ் ஹீரோவை இயக்கும் கேஜிஎஃப் இயக்குனர்.!

Default Image

பிரபாஸின் சலார் படத்தினை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை வைத்து படம் ஒன்றை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி முன்னணி இயக்குனரின் பட்டியலில் இடம் பிடித்தவர் பிரசாந்த் நீல் .தற்போது இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார் என்பதும்,அது ஜூலை 16-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் பிரசாந்த் நீலின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகவும் ,அந்த படத்தினை தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .2022-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.தற்போது ஜூனியர் என்டிஆர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்