கே.ஜி.எப்-2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர்.
ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த திரைப்படம் ஜூலை 16- ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன்படி, கே.ஜி.எப்-2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவிவருகிறது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…