கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படத்தின் 90% பணிகள் முடிந்து விட்டதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.
கார்த்தி அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவை யாவும் தடை செய்யப்பட்டது.
சமீபத்தில் கூட இப்பட தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு அவர்கள் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யவில்லை என்றும், சரியான நேரத்தில் சுல்தான் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது சுல்தான் படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார். அதில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் முக்கிய எடிட்டிங் பணிகள் 90% முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் தங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள மிகபெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட படமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் என்றும், படத்தினை ரிலீஸ் செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…