90% பணிகளை முடித்த கார்த்தியின் ‘சுல்தான்’ .! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

Default Image

கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படத்தின் 90% பணிகள் முடிந்து விட்டதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.

கார்த்தி அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவை யாவும் தடை செய்யப்பட்டது.

சமீபத்தில் கூட இப்பட தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு அவர்கள் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யவில்லை என்றும், சரியான நேரத்தில் சுல்தான் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது சுல்தான் படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார். அதில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் முக்கிய எடிட்டிங் பணிகள் 90% முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் தங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள மிகபெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட படமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் என்றும், படத்தினை ரிலீஸ் செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்