இயக்குனர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்..?

Default Image

இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் வைத்து எடுக்கப்படும் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளதாக தகவல். 

தமிழ் சினிமாவில் பீட்சா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை தொடர்ந்து ஜிகிர்தண்டா, இறைவி,  பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில், மிகவும் பிரபலமானார்.

தற்போது நடிகர் விக்ரம் அவரது மகன் மற்றும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரையும் வைத்து சியான்60 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் வைத்து எடுக்கப்படும் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளதாகவும், படம் அரசியலை பற்றி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையதளத்தில் உலாவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain