நடிகர் கார்த்தி அடுத்ததாக ஜிப்ஸி பட இயக்குனரான ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி தற்போது ரஷ்மிகா மந்தானாவுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியிட உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தியின் அடுத்த படத்தை ராஜுமுருகன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் இதுவரை சமூக அக்கறையுடன் கூடிய குக்கூ,ஜோக்கர்,ஜிப்ஸி உள்ளிட்ட தரமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக கார்த்தியை வைத்து பக்கா கமர்ஷியல் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…