கர்நாடக இசையமைப்பாளர் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே உயிரைவிட்ட சோகம்!

Default Image

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜெர்ரி பஜஜோடி, ஒரு மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து தன் உயிரை விட்டார். இந்த சம்பவம் இசைக்கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கொங்கனி இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இவர் மங்களூரு நகரில் உள்ள பேஜாய் பாகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.  அப்போது கன்னட பாடல் பாடிக் கொண்டிருக்கையில் மேடையில் சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்