மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 29ந்தேதி கொடியேற்றத்தோடு தொடங்குகிறது.
இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழாவின் முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 4ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழாவின் 5ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்க உள்ளது.இவ்விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருளி,பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அறுபத்துமூவர் விழாவில் விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர் கற்பகாம்பாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வந்து அவர்களுடன் திருவள்ளுவர், வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து வீதி உலா வருகின்றனர்.இதைத் தொடர்ந்து வரும்7ந்தேதி திருக்கல்யாண காட்சியோடு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…