கன்னி பெண்ணாக அவதரித்த கன்னியாகுமரி பகவதி அம்மன் தல வரலாறு!

Published by
மணிகண்டன்
  • தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப் பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார்.
  • சிவபெருமான் கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார்.

தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் கன்னியாக அவதரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பகவதி அம்மனின் தல வரலாறு பற்றி தற்போது பார்க்கலாம். அதற்கு ஓர் புராணகால சம்பவம் உள்ளது. விஷ்ணுவை நினைத்து பானாசுரன் எனும் அரக்கன் தவம் புரிந்தான். தவத்தின் பலனாக விஷ்ணு பகவான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு தனக்கு ஒரு கன்னிப்பெண்ணால் மட்டுமே அழிவு வர வேண்டும். மற்ற யாரும் தன்னை கொல்ல கூடாது என வேண்டிக்கொண்டான். அதன்படி வரம் கொடுத்துவிட்டு சென்றார் விஷ்ணு.

கன்னிப்பெண் என்பவள் மென்மையானவள். அவள் ஒருவரை வதம் செய்ய மாட்டாள் என நினைத்து பானாசுரன் தேவர்களையும் தேவலோகத்தில் இருப்பவர்களையும் துன்புறுத்த தொடங்கினான். இதனால் தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இதனையறிந்த சிவபெருமான். அசுரனை அழிக்க சக்திதேவி யால் மட்டுமே முடியும் என நினைத்து தனது திருவிளையாடலை தொடங்கினார் சிவ பெருமான். அதன்படி சக்திதேவி கன்னிப்பெண்ணாக முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பிறந்தார்.

அதன் பின்னர் சிவபெருமான் அந்த ஊரின் அருகிலேயே சுசீந்திரத்தில் தோன்றினார். பூலோகத்தில் இருக்கும் சிவபெருமான் சக்தி தேவியான பகவதி அம்மனின் அழகில் மயங்கி பகவதி அம்மனை திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இதனை அறிந்த தேவர்கள் பயந்து போனார்கள். ஏனென்றால், கன்னி பெண்ணால் மட்டுமே பானாசூரனை அழிக்க முடியும். சிவபெருமான் பகவதி அம்மனை திருமணம் செய்து கொண்டால், என்னவாகுமோ என நினைத்து பயந்தனர். இதனை அறிந்த நாரதர் தன் கலகத்தை ஆரம்பித்தார்.

அதாவது, திருமண நாளன்று சூரிய பகவான் தோன்றுவதற்குள் முன்னதாகவே நீங்கள் சென்றுவிட வேண்டும். அவ்வாறு செல்லவில்லை என்றால் நீங்கள் பகவதி அம்மனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சிவபெருமானிடம் நாரதர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். திருமண நாளுக்கு முன்னதாக இரவு சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டார் சிவபெருமான். விடிவதற்கு முன்னர் நாரதர் சேவல் ரூபத்தில் தோன்றி கூவினார். இதனை கேட்ட சிவபெருமான் விடிந்து விட்டது என நினைத்து திருமபாவும் சுசீந்திரத்திற்கு சென்று விட்டார்.

இதனை அறிந்த பகவதி அம்மன் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அக்னி பிழம்பாக கொதித்தெழுந்தாள். அந்தநேரம் பானாசுரன் பகவதி அம்மனை திருமணம் செய்து கொள்ள எண்ணி அம்மனை நெருங்கினான். கடும் கோபத்தில் இருந்த பகவதிஅம்மன் பானாசூரனை வதம் செய்தாள். பின்னர் தேவர்கள், பகவதி அம்மனை சாந்தப்படுத்தினார்கள். அதன் பின்னர் கன்னிப்பெண்ணாகவே பகவதி அம்மன் கன்னியாகுமரியில் காட்சி அளிக்க தொடங்கினாள்.

கன்னியாகுமரி அருகில் சுசீந்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாவித்து வருகிறார்.

Recent Posts

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…

20 minutes ago

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழக்கு தள்ளுபடி.!

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…

54 minutes ago

கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…

1 hour ago

“ரொம்ப முயற்சி செய்தான்.. ஆனால் இறைவன் பறிச்சிட்டான்” வருத்தத்தோடு கூறிய ⁠எம்.எஸ்.பாஸ்கர்.!

 சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…

1 hour ago

‘அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…

2 hours ago

“அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…

3 hours ago