கங்கனா ரணாவத் தான் தங்கியிருந்த ஓட்டலில் சஞ்சய் தத் தங்கியிருப்பதை அறிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே.ஜி.எஃப் -2 படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தற்போது சிகிச்சையை முடித்த சஞ்சய் தத் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அதற்காக ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் .அதே ஹோட்டலில் நடிகை கங்கனா ராணவத்தும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.இந்த நிலையில் சஞ்சய் தத் தான் தங்கியுள்ள ஓட்டலில் தான் உள்ளார் என்பதை தெரிந்து கொண்ட கங்கனா உடனடியாக சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் .
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா , ஐதராபாத்தில் நான் தங்கியிருக்கும் அதே ஓட்டலில் அவர் தங்கியிருப்பதை அறிந்தவுடன் இன்று காலை சஞ்சய் சாரை பார்க்க சென்றேன் .அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…