தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் மிகவும் இழுபறிக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில், ஜோ பைடனே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வான நிலையில், அமெரிக்காவின் டெலாவரில் தனது முதல் வெற்றி உரையை நிகழ்த்தியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ‘என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து அமெரிக்க மக்களுக்கும் நன்றி. வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி என்றும், சிறந்த எதிர்காலத்திற்காக, மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளீர்கள். இது அமெரிக்காவுக்கு புதிய நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன். நான் துணை அதிபராக ஆனதின் பெருமை குறித்து நினைத்து பார்த்திருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், ஒரு பெண்ணை துணை அதிபராக நியமிக்கும் தைரியம் பைடனுக்கும் மட்டுமே உள்ளது என்றும், முதல் பெண், துணை அதிபராக தேர்வாகி இருந்தாலும், இது கடைசியாக இருக்காது. இது துவக்கமே என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…