அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் – நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் காப்பான் படம் மூலம் இணைந்து உள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்திற்கும் தற்போது கதை திருட்டு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது ஜான் சார்லஸ் என்பவர் திரைப்பட சங்கத்தில் சரவெடி எனும் பெயரில் இந்த கதையை பதிவு செய்து வைத்ததாகவும் அந்த கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியதாகவும் அவர் தற்போது அதை காப்பான் படமாக உருவாக்கி உள்ளதாகவும், புகார் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 4 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என ஒத்திவைத்தார்.
பட ரிலீஸ் சமயத்தில் இந்த மாதிரி பிரச்சினை வருவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆனாலும் தொடர்ந்து சரியாக ரிலீஸ் சமயத்தில் வருவது தயாரிப்பாளருக்கும், அந்த படத்தில் பணியாற்றிய மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சிக்கலை உண்டாக்குகிறது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…