பொதுவாக பெண்கள் பலருக்கும் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் உள்ள ரோமம் தான். முகத்தை அழகு படுத்துவதற்காக பெண்கள் பணத்தை செலவு செய்து பர்லருக்கு செல்கின்றனர். சிலருக்கு அதனால் பலனும் கிடைக்காமல் போய்விடுகிறது. குறிப்பாக, பல பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை நீக்குவதற்காக பார்லருக்கு சென்று பணத்தை விரையம் செய்கின்றனர்.
ஆனால் பார்லருக்கு சென்றாலும் முடி நிரந்தரமாக நீங்கப் போவதில்லை. பொதுவாக பெண்களுக்கு மேல் உதடு மற்றும் கன்னங்களில் இருக்க கூடிய முடியை வீட்டிலிருந்தபடியே இயற்கையாக காற்றாழையை பயன்படுத்தி எப்படி நீக்குவது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் காற்றாழையிலிருந்து நன்றாக ஜெல்லை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் கற்றாழை ஜெல்லை ஊற்றி நன்கு கிளற வேண்டும். ஜெல் சூடு ஏறியவுடன், 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கட்டி சேராமல் கிளரவும். அதன் பின் இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
முகம் முழுவதும் இதை தடவாமல், முகத்தில் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகள் இருக்கும் இடத்தில் மட்டும் இதை மாஸ்க் போல தடவிக் கொள்ளவும். கண்கள், உதடுகள் மற்றும் புருவங்களில் இதை பயன்படுத்த வேண்டாம்.
இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் காயவிடவும். அதன் பின்பு கழுத்தில் இருந்து இந்த மாஸ்கை மேல்புறமாக அப்படியே முன்னோக்கி இழுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள முடிகள் அந்த மாஸ்க் உடன் சேர்ந்து வந்துவிடும். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…