முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்க கற்றாழை மட்டும் இருந்தால் போதும்…!

Published by
Rebekal

பொதுவாக பெண்கள் பலருக்கும் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் உள்ள ரோமம் தான். முகத்தை அழகு படுத்துவதற்காக பெண்கள் பணத்தை செலவு செய்து பர்லருக்கு செல்கின்றனர். சிலருக்கு அதனால் பலனும் கிடைக்காமல் போய்விடுகிறது. குறிப்பாக, பல பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை நீக்குவதற்காக பார்லருக்கு சென்று பணத்தை விரையம் செய்கின்றனர்.

ஆனால் பார்லருக்கு சென்றாலும் முடி நிரந்தரமாக நீங்கப் போவதில்லை. பொதுவாக பெண்களுக்கு மேல் உதடு மற்றும் கன்னங்களில் இருக்க கூடிய முடியை வீட்டிலிருந்தபடியே இயற்கையாக காற்றாழையை பயன்படுத்தி எப்படி நீக்குவது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையானவை

  • கற்றாழை ஜெல்
  • தேன்
  • சர்க்கரை

செய்முறை

முதலில் காற்றாழையிலிருந்து நன்றாக ஜெல்லை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் கற்றாழை ஜெல்லை ஊற்றி நன்கு கிளற வேண்டும். ஜெல் சூடு ஏறியவுடன், 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கட்டி சேராமல் கிளரவும். அதன் பின் இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

உபயோகிக்கும் முறை

முகம் முழுவதும் இதை தடவாமல், முகத்தில் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகள் இருக்கும் இடத்தில் மட்டும் இதை மாஸ்க் போல தடவிக் கொள்ளவும். கண்கள், உதடுகள் மற்றும் புருவங்களில் இதை பயன்படுத்த வேண்டாம்.

இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் காயவிடவும். அதன் பின்பு கழுத்தில் இருந்து இந்த மாஸ்கை மேல்புறமாக அப்படியே முன்னோக்கி இழுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள முடிகள் அந்த மாஸ்க் உடன் சேர்ந்து வந்துவிடும். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

Published by
Rebekal

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

8 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

9 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

9 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

10 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

12 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

13 hours ago