பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனம் ..!

Published by
murugan

பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனத்துக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நீதிபதி ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் பார் கவுன்சில் மிரட்டல் விடுத்தது. நீதிபதி ஆயிஷா நியமனத்தை எதிர்ப்பவர்கள் கூறுகையில், சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டு ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதாகக் கூறுகின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் பரவாயில்லை, உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படக் கூடாது என்றும் சிலர் கூறி வந்தனர். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு முறை நியமிக்க முடிவு செய்தார். ஆனால் எதிர்ப்பு காரணமாக தள்ளிப்போனது. நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆதரவாக 4 பேர், எதிராக 4 பேரும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில், நீதிபதி குல்சார் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதிதான் இது குறித்து முடிவெடுப்பார் என எதிர்ப்பாளர்கள் கூறினார். நீதிபதி ஆயிஷா, சீனியாரிட்டியில் நான்காவது இடத்தில் உள்ளதால், அவரை உச்சநீதிமன்றத்துக்கு முதலில் அனுப்புவது தவறு என்று பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது.

இந்நிலையில், நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து இன்று நடைபெற்ற பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை  உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த 5 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது பாகிஸ்தானின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்க உள்ளார்.  நீதிபதி ஆயிஷா தற்போது லாகூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார்.

நீதிபதி ஆயிஷா நியமனம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.

 

Published by
murugan

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

18 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

39 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

42 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago