Jovika vijaykumar [file image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டு கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஜோவிகாவுக்கு பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனை மகிழ்ச்சியுடன் நடிகை வனிதாவே தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்த ஜோவிகா தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ” எனக்கு ஆதரவு கொடுத்த மக்கள் அனைவருக்கும் இந்த சமயம் நான் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை வரவேண்டும் என்று நினைத்தவர்களுக்காக இதனை சொல்கிறேன். அவர்கள் எல்லாருக்கும் ரொம்பவே நன்றி.
பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!
நான் வீட்டில் இருந்து வெளிய வந்ததை நினைத்து யாரும் கவலை படவேண்டாம். ஏனென்றால், நான் என்னுடைய அம்மாவை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. அதனால் என்னுடைய நேரத்தால் நான் வெளியே வந்துட்டேன். என்னுடைய அம்மா தான் என்னுடைய உலகம் அவரை கவனித்து கொள்வது என்னுடைய கடமை. வீட்டிற்குள் இருக்கும்போதே எனக்கு இது தோன்றிவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் நான் கற்றுக்கொண்ட விஷயம் பல அது எல்லாம் நான் மறக்கவே மாட்டேன். அந்த அளவிற்கு நல்ல அனுபவத்தையும் இந்த பிக் பாஸ் எனக்கு கொடுத்து இருக்கிறது. வீட்டிற்குள் இருக்கும் அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்து கொள்கிறேன். வீட்டிற்குள் சிறந்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த தவறுகளை நினைத்து நான் ஒரு போதும் வருத்தமாட்டேன்” எனவும் கடிதத்தில் ஜோவிகா எழுதியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 60 நாட்கள் வீட்டில் இருந்த ஜோவிகாவுக்கு சம்பளமாக 10 லட்சம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…