ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் கொடியை அகற்றி பத்திரிகையாளர் கைது

Published by
Rebekal
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தத்யால் எனும் நகரில் பாகிஸ்தான் கொடியை அகற்றிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் தத்யால் எனும் நகர் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதன் பொது இடத்தில் பாகிஸ்தான் நாட்டின் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலரும் பத்திரிகையாளரும் ஆகிய தன்வீர் அகமது என்பவர் கடந்த சில நாட்களாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் அந்த கொடியை அகற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்து இருந்ததுடன், உண்ணாவிரதம் இருந்தும் அவர் போராட்டம் நடத்தியுள்ளார். ஆனால் இந்த பகுதி நிர்வாகம் கொடியை இறக்க முன்வராததால் அகமது அந்தக் கொடியை தானாகவே அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அகமதுவே வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தானின் தேசிய கொடியை நான் தான் அகற்றினேன். இதனால் உளவு அமைப்புகள் என்னை பின்தொடர தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும், சதுக்கத்தில் இருந்த இரண்டாவது பாகிஸ்தான் தேசியக் கொடியையும் சுவரில் ஏறி அவர் அப்புறப் படுத்தி உள்ளார். இதனால் பாகிஸ்தானிய அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படையினர் அவரைக் கைது செய்து துன்புறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Published by
Rebekal

Recent Posts

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

16 minutes ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

1 hour ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

2 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

4 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

5 hours ago