ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியாக இருந்த ஜான் மெக்காஃபே நேற்று சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியாக இருந்த 75 வயதான ஜான் மெக்காஃபே,தனது பெயரிலான மெக்காஃபே நிறுவனம் என்ற திட்டத்தை 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து,கடந்த 2014- 18 ஆம் ஆண்டுகளின்போது மெக்காஃபே 12 மில்லியன் டாலர்களை வருமானம் ஈட்டியதாகவும், ஆனால், வரியை முறையாக செலுத்தவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. மேலும், நியூயார்க்கில் நடந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதன்காரணமாக,கடந்த 2020 அக்டோபர் மாதம் ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் மெக்காஃபே கைது செய்யப்பட்டு, பார்சிலோனா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து,மெக்காஃபேயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்க ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது என்று நேற்று வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது.இதனால்,குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மெக்காஃபே தனது வாழ்நாள் முழுவதையும் அமெரிக்க சிறையில் கழிக்க வேண்டும்.
இந்நிலையில்,நேற்று இரவு மெக்காஃபே சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதனை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…