சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிகை ஜோதிகா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் நடிக்க வுள்ளார். மேலும் லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையனாக நடிக்கவுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க கோரி அவரை அணுகியதாக கூறப்படுகிறது. மேலும் ஜோதிகா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒன்று சந்திரமுகியாகவும், மற்றொன்று முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த செய்தி வதந்தியா இல்லையா என்று கூறி படக்குழுவினர் தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…