விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ – முகேஷ் அம்பானி அறிவிப்பு..!

Published by
Sharmi

கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் இருக்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் வரும் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட், திரையில் உள்ள எழுத்துக்களை வாசித்து கூறும் வசதி, ஏஆர் ஃபில்டர் உடன் கூடிய கேமரா வசதி, மொழிப்பெயர்ப்பு ஆகியவைகள் இருப்பதாக தெரிவிப்பட்டுள்ளது.

மேலும், 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வசதியை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் விலை பற்றிய தகவல்களும் இதன் கூடுதல் விவரங்கள் பற்றியும் வரும் வாரங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Sharmi

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

5 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

5 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

5 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

8 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

8 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

9 hours ago