விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ – முகேஷ் அம்பானி அறிவிப்பு..!

Default Image

கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் இருக்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் வரும் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட், திரையில் உள்ள எழுத்துக்களை வாசித்து கூறும் வசதி, ஏஆர் ஃபில்டர் உடன் கூடிய கேமரா வசதி, மொழிப்பெயர்ப்பு ஆகியவைகள் இருப்பதாக தெரிவிப்பட்டுள்ளது.

மேலும், 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வசதியை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் விலை பற்றிய தகவல்களும் இதன் கூடுதல் விவரங்கள் பற்றியும் வரும் வாரங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்