பொன்னியின் செல்வனுக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் தயாராக உள்ள புதிய திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?!

Default Image

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அவரது 25வது திரைப்படம் தயாராகி விட்டது. பூமி என பெயரிடப்பட்ட இப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படத்தினை இயக்கிய லக்ஷ்மன் இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனை அடுத்து ஜெயம் ரவி, அஹமது இயக்கத்தில் ஜன கன மன எனும் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதற்கடுத்து, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக தயாராக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.இப்படம் பற்றிய அறிவிப்பு அடுத்த வருடம் தான் வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்