ஜெயலலிதா 2 வாரத்துக்கு சரும பிரச்னையால் ஸ்டிராய்டு எடுத்துக் கொண்டார்!

Default Image

ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாக,  தெரிவித்துள்ளார்.

ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் இன்று இரண்டாவது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாகவும், வீட்டில் திடீரென ஜெயலலிதா மயக்கம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தாமும் உடனிருந்ததாக தெரிவித்த சிவக்குமார், சரும பிரச்னையால் ஜெயலலிதா 2 வாரத்துக்கு ஸ்டிராய்டு எடுத்துக் கொண்டதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்