பாலிவுட் நடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜாவேத் அக்தர்!

Default Image

பாலிவுட் நடிகை கங்கனா மீது ஜாவேத் அக்தர் அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா தற்பொழுது அண்மை காலங்களாகவே பரபரப்பு உலகிலும் அடிக்கடி வலம் வருகிறார். அம்மாள், ஏதுனும் ஒரு புகாரில் அல்லது பிரச்சனைகளில் சிக்குவது தற்பொழுது இவருக்கு வழக்கமாகி விட்டது. அண்மையில் கூட மற்ற பிற பிரபல நடிகைகளுக்கு எதிராக இவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ஹ்ருத்திக் ரோஷனை கங்கனா காதலிப்பதாக திரையுலகில் வதந்தி பரவிய போது, ஜாவேத் அக்தர் அவர்கள் ஹ்ருத்திக் ரோஷனிடமிருந்து விலகியிருக்கும்படி தனக்கு அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய ஜாவேத் தான் அவ்வாறு கூறவில்லை என விளக்கமளித்திருந்ததுடன், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும்படி உண்மைக்கு புறம்பானதை கங்கனா கூறுவதாக மும்பை பெருநகர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்