மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்- 25! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Default Image

கொரோனா காரணமாக அடிக்கடி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் தான் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கேலி ஜோதி புகழாக அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஜேம்ஸ்பாண்ட் 25. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இந்த படத்தின் மூலம் ஏற்கனவே 24 கதைகளை கொடுத்துள்ள நிலையில், தற்பொழுது 25 வது படமாக புதிய கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கதை தற்பொழுது முக்கியமான ஒன்றாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் டேனியல் கிரெக் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளார்.

மேலும், ஹாரிஸ், லியா, பெண் விஷா, கிறிஸ்தப் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நோட் டைம் டுடே இந்த படத்தை நவம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த படம் 2021 ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதாக அறிவித்து இருந்தது. தற்போது மீண்டும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளதால், ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதில்லை எனவும் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
CBSE Exam
Rohit sharma - Ravindra Jadeja - Virat kohli
Loksabha Opposition leader Rahul gandhi
kuldeep or chakaravarthy
PinkAuto
Vijay - Annamalai -Seeman