ஆஸ்கர் போட்டிக்கு இந்திய சார்பில் போட்டியிட்ட ஜல்லிக்கட்டு திரைப்படம் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற மலையாள திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில்
ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
பல விருதுகளை வென்ற இந்த திரைப்படம்
இந்தியாவின் சார்பாகப் சிறந்த அயல்நாட்டு திரைப்பட பிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது.இந்த பிரிவிற்காக மொத்தம் 93 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில் ஆஸ்கர் போட்டிக்கான இறுதிப் பட்டியலை அகாடமி புதன்கிழமை அன்று வெளியிட்டது.அதில் மலையாள திரைப்படமான ‘ ஜல்லிக்கட்டு’ இடம் பெறவில்லை .இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை ஆஸ்கர் விருதை இந்தியாவைச் சேர்ந்த எந்தத் திரைப்படமும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…