கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தினமும் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.கொரோனா வைரஸ் சீனா அடுத்து ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,268 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,157 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனாலும் தினமும் பலி எண்ணிக்கை, மற்றும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இத்தாலியில் 5,090 தீவிர சிகிச்சை படுக்கையறைகள் மட்டுமே உள்ளதால் தீவிர சிகிக்சை பிரிவுவில் படுக்கையறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்ஸ் மற்றும் கூடாரங்களில் புதிய படுக்கை வசதி தேவை அதிகரித்து உள்ளது. மேலும் இத்தாலியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் தேவை அதிகரித்து உள்ளது.
இதனால் 80 வயது மேற்பட்டோர் இறந்தாலும் பரவாயில்லை என இத்தாலி அரசு தரப்பில் கூறப்பட்டதாக தி டெலிகிராப் என்ற இதழில் செய்தி வெளியாகி உள்ளது.மேலும் இத்தாலி அரசு பொதுமக்கள் அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…