புது தோசைக்கல் வீட்டில் வாங்கியிருக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புது தோசைக்கல்லில் தோசை உடனே வராது. அது பழகிய பிறகே தோசை நன்றாக வரும். அது வரை தோசை ஒழுங்காக வராது. இதை நீக்க 5 நிமிடம் போதும். நீங்கள் வாங்கியிருக்கும் தோசைக்கல் இந்தோனிய கல்லாக இருந்தாலும், அல்லது இரும்புக்கல் ஆக இருந்தாலும் சரி இந்த முறையில் எளிமையாக தோசை அழகாக சுட வைக்க முடியும். முதலில் தோசைக்கல்லை நன்கு சூடு செய்து அதில் 2 ஸ்பூன் அளவு சமையல் எண்ணெய்யை ஊற்றி அதில் 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பை போடுங்கள்.
பின்னர் கல் உப்பை தோசைக்கல்லில் எல்லா இடங்களிலும் படும்படி வறுக்க வேண்டும். இதனையடுத்து கல் உப்பை மட்டும் அதில் இருந்து எடுத்து விட்டு பாதியாக வெட்டிய ஒரு வெங்காயத்தை எடுத்து அதில் தேய்க்க வேண்டும். பின்னர் மீண்டும் 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பு போட்டு வறுக்க வேண்டும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். கல் உப்பை வருத்தபிறகு மீண்டும் அதனை எடுத்து விட்டு நறுக்கிய வெங்காயத்தை தேய்க்க வேண்டும். அவ்வளவு தான் உங்கள் தோசை கல் தோசை ஊற்றுவதற்கு தயார். வீட்டில் இருக்கும் தோசைக்கல்லில் கூட தோசை வரவில்லை என்றால் இது போன்று செய்து பாருங்கள்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…