இந்தியாவில் சொந்த விற்பனை நிலையங்கள்…டெஸ்லாவின் அதிரடி முடிவு…!

Published by
Edison

இந்தியாவில் முழுமையாக சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக பல சாலைத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும்,அதன் வாகனங்களை விற்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதாவது,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து,பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்,இந்தியாவில் விரைவில் விற்பனையைத் துவங்கக் காத்திருக்கும் டெஸ்லா, தனது கார்களை எவ்விதமான கூட்டணியும் இல்லாமல் நேரடியாக, தனது வாடிக்கையாளர்களுக்குச் சொந்த கார் ஷோரூம் மூலம் விற்பனை செய்ய எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனை தொடர்பான அன்னிய நேரடி முதலீடு (FDI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டியிருப்பதால், முழுமையாகச் சொந்தமான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான செயல்முறையைக் கண்டறிய டெஸ்லா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.அதன் வாகனங்களை விற்கும் திட்டத்தில் உள்ளூர் ஆதார விதிமுறைகளும் அடங்கும் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.

அதாவது,ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் நேரடியாக விற்பனை மற்றும் வர்த்தகம் செய்ய வரும் போது,ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையில் 51 சதவீதத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பங்குகளை உள்ளடக்கிய முன்மொழிவுகளைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் மதிப்பில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் இருந்து பெற வேண்டும்.அதன்படி, டெஸ்லா நிறுவனம் தனது கார்களுக்கான உற்பத்தி பொருட்களில் 30 சதவீதம் இந்தியாவில் இருந்து பெற வேண்டும்.

இதன் காரணமாகவே,முன்னதாக டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ் ஆகிய மூன்று உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago