தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண் சவுமியா குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் பேச்சு…!

Published by
Edison

தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண் சவுமியாவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக,அவரது குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் நேற்று பேசியுள்ளார்.

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை தடை விதித்தது.இதன்காரணமாக,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து,பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு மத்தியில்,ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.அதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும்,இஸ்ரேல்-ஹமாஸ் போராளிக்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.அப்போது,ஹமாஸ் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் சவுமியா என்பவர் உயிரிழந்தார்.அவர்,கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுமியா கடந்த 7 ஆண்டாக இஸ்ரேலில் ஒரு வயதான பெண்ணை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.அவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.இரண்டு ஆண்டுக்கு முன் கேரளா வந்து சென்ற சவுமியா,இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.இதனையடுத்து,அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின்னர் அங்கிருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில்,இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின்,நேற்று மாலை இடுக்கியில் உள்ள சவுமியா குடும்பத்தினரக்கு ஆறுதல் கூறுவதற்காக 20 நிமிடம் பேசியுள்ளார்.எனினும்,இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் அவர்களுடன் நடத்திய உரையாடலின் விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால், அதிபர் ருவன் ரிவ்லின் ஆலோசகர்,சவுமியா குடும்பத்தினருடன் அதிபர் பேசியதை உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்னதாக,இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டாக்டர் ரான் மல்காவும், சவுமியா குடும்பத்தினருடன் ஆறுதல் கூறுவதற்காக கடந்த வாரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

3 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

4 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

6 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

6 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

7 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

7 hours ago